நீதிக்காகவும், உரிமைக்காகவும் உலகில் எங்கு போராட்டம் நடைபெற்றாலும் அதற்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என தம்பிதுரை எம்பி தெரிவித்துள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு இலங்கை போரின்போது நடந்த ஈழ இனப்படுகொலைக்கு எதிராக ஐ.நா குழு சமர்ப்பித்த அறிக்கையில், பத்தாண்டுகள் ஆகியும் இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால், ஐ.நா.சபை கூட்டத்தில் இனப்படுகொலை குற்றங்களைப் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு சென்றிடும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இலங்கையில், மனித உரிமை மீறப்படுவதாக கண்டனம் தெரிவித்து, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட 6 நாடுகள், ஐநா மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதன் மீதான வாக்கெடுடுப்பு நேற்று நடைபெற இருந்த நிலையில், திட்டமிடலில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக ஒத்துவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மதியம் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இந்த நிலையில், ஐ.நா.சபை கூட்டத்தில் இலங்கை போர்க்குற்றத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டுமென அதிமுக தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாடாளுமன்ற மாநிலங்களைவையில் பேசிய அதிமுக எம்பி தம்பிதுரை, இலங்கை போர்குற்றத்திற்கு எதிராக கொண்டுவந்துள்ள தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
சிறுபான்மை இன தமிழர்கள் மீதான இலங்கை அரசின் கிரிமினல் நடவடிக்கைகள் குறித்து விசாரணை தேவை என்றும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்காவிடில், அங்கு அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், நீதிக்காகவும், உரிமைக்காகவும் உலகில் எங்கு போராட்டம் நடைபெற்றாலும் அதற்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Yuzvendra Chahal : ஐபிஎல் தொடரில் ஒரு பவுலராக யாரும் செய்யாத புதிய சாதனையை எட்டியுள்ளார் யுஸ்வேந்திர சாஹல். கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த…
Vijayakanth : விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நஷ்டத்தால் மூழ்கிய போது அவருக்கும், விஜய்க்கும் விஜயகாந்த் பெரிய உதவியை செய்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் பல தயாரிப்பாளர்களுக்கு, பல இயக்குனர்களுக்கு…
PM Modi : உண்மையை சொன்னதால், I.N.D.I.A கூட்டணி பயத்தில் மூழ்கியுள்ளது என பிரதமர் மோடி ராஜஸ்தான் பிரச்சார கூட்டத்தில் பேசியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 25…
Selvaraghavan : செல்வராகவன் தன்னை கெட்டவார்த்தை போட்டு திட்டியதாக பாவா லட்சுமணன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் படப்பிடிப்பு தளங்களில் மிகவும் கோபமாக நடந்து கொள்வார் என…
Weather Update: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்ப அலை அதிகரித்து காணப்படும். தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை மையம்…
Arvind Kejriwal: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசி வழங்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு,…