#Breaking:இல்லத்தரசிகள் ஷாக்…தங்கம் விலை கிடுகிடு உயர்வு – ஒரு சவரன் விலை என்ன தெரியுமா?..!

பொதுவாக பெண்கள் மிகவும் விரும்பி அணியும் பொருட்களில் தங்க நகைகள்தான் முதலிடம் வகிக்கும்.மேலும்,ஏதாவது முதலீடாக இருந்தாலும் தங்கத்தில்தான் பெரும்பாலான பெண்கள் முதலீடு செய்வார்கள்.இதனால்,தங்கத்தின் விலையை பெண்கள் எப்போதும் உற்று நோக்குவதுண்டு.

இதனிடையே,கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.இந்நிலையில்,சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 உயர்ந்து ரூ.38,168-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதைப்போல, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.43 உயர்ந்து,ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,771-க்கு விற்பனை செய்யப்படுகிறது.மேலும்,ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் 20 காசுகள் உயர்ந்து,கிராம் ரூ.65.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Comment