#TodayPrice:சதத்தை விட்டு குறையுமா பெட்ரோல்,டீசல் விலை? – எதிர்பார்ப்பில் வாகன ஓட்டிகள்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து காணப்பட்டாலும்,நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தெடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது.குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல்,டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில்,சென்னையில் இன்று 12-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு  ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

எனினும்,பெட்ரோல்,டீசல் விலை சதத்தை விட்டு குறைக்கப்பட வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் விருப்பமாக உள்ளது.ஏனெனில், மாதம் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே சம்பளம் வாங்கும் ஒரு சாமானியருக்கு, பெட்ரோல் விலை என்பது தனது மாத பட்ஜெட்டில் பெரும் தொகையை பிடித்து விடுகிறது.இதனால்,பெட்ரோல்,டீசல் விலை குறைக்கப்பட வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.