இன்று தமிழ்நாடு மக்களால் கொண்டாடப்படும் “தமிழ்நாடு தினம்” குறித்த வரலாற்றை அறிவோம்.
இந்தியா சுதந்திரம் பெற்ற 8 ஆம் ஆண்டில், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரள ஆகிய மாநிலங்களை உள்ளடக்கி, “மெட்ராஸ் பிரசிடென்சி” என ஒரு மாநிலமாக இருந்தது. இதனை மாற்றக்கோரி, சென்னை பொட்டி ஸ்ரீராமுலு, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அப்பொழுது அவர் உயிரிழக்க, அதனைத்தொடர்ந்து தந்தை பெரியார், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, காமராசர் உட்பட பலர் போராட்டம் நடத்தியன் மூலம், 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா என தனி மாநிலங்களாக பிரிக்கப்பட்டு, “மெட்ராஸ்” என தனி மாநிலமாக உருவானது. அதன்பின் 1968 ஆம் ஆண்டு, “தமிழ்நாடு” என பெயர் சூட்டப்பட்டது.
இந்தநிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி, “தமிழ்நாடு தினம்” என ஒரு நாள் கொண்டாடப்பட வேண்டும் என தொடர்ந்து சட்டப்பேரவையில் தொடர்ந்து கோரிக்கை வைத்து பேசி வந்தார். முதல்வர் மட்டுமின்றி, அமைச்சர் பாண்டியராஜன், பல அரசியல் கட்சி தலைவர்கள், தமிழ் அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்கள் என பலரும் இன்றைய தினத்தை “தமிழ்நாடு தினம்” என்ற விழாவை அரசே விழா எடுத்துக்கொண்டாட வேண்டும் என்று நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்த நிலையில், இது கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.
மேலும், நவம்பர் 1 ஆம் தேதியை “தமிழ்நாடு தினம்” என முதல்வர் அறிவித்ததோடு, அந்த கொண்டாட்டங்களுக்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடும் செய்துள்ளார். இந்நிலையில், இந்த தமிழ்நாடு தினத்தை கொண்டாடும் விதமாக, மக்கள் பலரும் சமூகவலைத்தளத்தில் #தமிழ்நாடுநாள்பெருவிழா2020 என்ற ஹாஸ்டாகில் தங்களின் கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டு வருகின்றனர். அதுமட்மின்றி, தமிழக சட்டசபையை மின்விளக்குகளால் அலங்கரித்தும், அரசியல் தலைவர், பிரபலங்கள், தமிழ் அறிஞர்கள் உட்பட பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொண்டு வருகின்றனர்.
Brian Lara : 42 வயதிலும் தோனி இப்படி விளையாடுவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது என பிரையன் லாரா கூறியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் வீரர்…
Election2024: தமிழகத்தில் தேர்தல் நிலவரம் குறித்த துல்லியமான அறிவிப்பு தொடர்ந்து தள்ளிபோகி வருவதால் குழப்பத்தில் மக்கள். தமிழகத்தில் 39 தொகுதிகளில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று…
கருப்பு உலர் திராட்சை -கருப்பு திராட்சையின் ஏராளமான நன்மைகள் பற்றி இப்பதிவில் அறிந்து கொள்வோம் . இயற்கை நமக்கு அளித்த இன்றியமையாத உணவுகளில் ஒன்றாக கருப்பு உலர்…
Sendrayan : பொல்லாதவன் படத்தின் டிக்கெட்டை பிளாக்கில் விற்று போலீஸ் கிட்ட தான் சிக்கியதாக சென்ராயன் கூறிஉள்ளார். காமெடி கதாபாத்திரங்கள் வில்லன் கதாபாத்திரங்கள் என இந்த மாதிரி…
The Shompen Tribes : அந்தமான் நிகோபார் தீவுகளில் வசித்து வரும் ஷாம்பன் பழங்குடியினர் முதன்முறையாக தேர்தலில் வாக்களித்தனர். நாடுமுழுவதும் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் 102…
Premalu 2: மலையாள சூப்பர்ஹிட் படமான 'பிரேமலு' படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு மலையாள சினிமாவில் பிரம்மயுகம், மஞ்சும்மல் பாய்ஸ் மற்றும் பிரேமலு…