தமிழகத்தில் 30 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு ! 293 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று கொரோனா வைராசால் 30,355 பேர் புதிதாக பாதிப்படைந்துள்ளனர் 293 உயிரிழப்பு.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30,355 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,68,864 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்றைய பாதிப்பு 7564 ஆக பதிவாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனாவால் இன்று 293 பேர் இறந்துள்ளனர்.

இதுவரை கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16,471 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 19,508 பேர் குணமடைந்தநிலையில், இதுவரையிலும் 12,79,658 பேர் சிகிச்சை முடிந்த வீடு திரும்பியுள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,56,356 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகள் எண்ணிக்கை 2,44,67,287 ஆக உள்ளது. மேலும் தற்போது 1,72,735 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.