மாணவர்களே இன்றுதான் கடைசி நாள்.! உடனே விண்ணப்பியுங்கள்….

12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.

நடந்து முடிந்த 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 47,000 பேர் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில், அவர்களை இந்த ஆண்டே தேர்ச்சி பெற செய்வதற்காக துணைத் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. அதற்கு, இன்று தான் கடைசி நாளாகும், ஆம்… இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

இதையும், தவறினால் தத்கல் முறையில் கூடுதல் கட்டணத்துடன் சனிக்கிழமை வரை விண்ணப்பிக்கலாம். ஜூன் 19-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு துணைத்தேர்வுகள் நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி, 19, 20, 21, 22, 23 ,24, 25, 26 ஆகிய தினங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை 12-ஆம் வகுப்பு துணை தேர்வு நடைபெற உள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.