ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்றே கடைசி நாள்.!

கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக வருகின்ற  30-ம் தேதி இரவு வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மாவட்டங்களில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 1000 நிவாரணமவழங்கப்படும் என்றும், இந்த நிவாரண தொகை 22-ம் தேதி  முதல் 26-ம் தேதி வரை சம்பந்தப்பட்ட நியாயவிலை கடை பணியாளர்கள் மூலமாக வீடுவீடாக சென்று வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், முதல்வர் அறிவிப்பு படி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணம் தொகை வழங்கும் பணி இன்றுடன் முடிவடைகிறது.

author avatar
murugan