இன்று தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்.!

இன்று தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்.!

நாடு முழுவதும் ஆண்டு தோறும் நவம்பர் 7-ஆம் தேதியான இன்று தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது . 

நாடு முழுவதும் ஆண்டு தோறும் நவம்பர் 7-ஆம் தேதியான இன்று தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது .  மக்களிடையே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த தினம் 2014-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது .  உலகளவில் புற்றுநோயால் மக்கள் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.உலக சுகாதார அமைப்பு இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

அதில் 10 இந்தியர்களில் ஒருவர் தங்கள் வாழ்நாளில் புற்றுநோயை உருவாக்கும் என்றும்,  15 பேரில் ஒருவர் நோயால் இறந்துவிடுவார் என்றும் கூறினார். ஆண்கள் புகையிலை தொடர்பான தலை மற்றும் கழுத்து புற்றுநோய்களுக்கு ஆளாகிறார்கள்,  குறிப்பாக வாய்வழி புற்றுநோய்கள் மற்றும் பெண்கள் கர்ப்பப்பை வாய்,  மார்பக மற்றும் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

புற்றுநோய்க்கென்று அறிகுறிகள் இல்லாத காரணத்தால் பலர் நோய் முற்றிய நிலையிலையே கண்டுபிடிப்பதால் உயிரிழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலே கண்டறிந்து சிகிச்சை பெறுவதன் மூலம் புற்றுநோயை எளிதாக குணப்படுத்தலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே தீவிரப்படுத்துவதன் மூலமே உயிரிழப்பை தடுக்க முடியும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Join our channel google news Youtube