#43எம்.பிக்கள்_இன்று பாராளுமன்றத்தில் பதவியேற்பு!!

இன்று பாரளுமன்ற  ராஜ்யசபாவிற்கு முதன்முறையாக தேர்வாகியுள்ள 43 எம்.பி.,க்கள் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜ்யசபாவுக்கு  20 மாநிலங்களில் இருந்து சுமார் 61 எம்.பி.,க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். கடந்த மார்ச் முதல் எம்.பிக்கள் தேர்வாகி வந்தனர்.ஆனால் நாட்டில் கொரோனா பரவல் காரணமாக, இவர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியானது தள்ளிக் கொண்டே இருந்தது.

இந்நிலையில் ராஜ்யசபாவின் தலைவர் வெங்கையா நாயுடு இவ்விவகாரத்தில் முடிவெடுத்ததை அடுத்து  இன்று (ஜூலை 22) புதிய, எம்.பிக்களின் பதவியேற்பு நிகழ்ச்சி பாராளுமன்றத்தில் நடைபெறும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி வளாகம் முழுதும், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.மேலும் பதவியேற்பு நிகழ்ச்சியில், புதிய எம்.பிக்கள் அனைவரும் பதவியேற்பது சந்தேகமே என்று கூறப்பட்ட நிலையில் முதன்முறையாக தேர்வாகியுள்ள 43 எம்.பிக்கள் இன்று (ஜூலை 22) பதவியேற்க உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

author avatar
kavitha