இன்றைய (04.06.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்: நீங்கள் எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் நன்கு யோசிக்க வேண்டும். வீடு கட்டுதல், புனரமைத்தல் போன்ற பொறுப்புகள் காரணமாக நீங்கள் பணம் செலவு செய்ய நேரலாம்.

ரிஷபம்: இன்று நீங்கள் நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். இந்த அணுகுமுறை உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும். இன்று எடுக்கும் பயனுள்ள முடிவுகள் உங்களுக்கு சாதகமான பலன்களை பெற்றுத் தரும்.

மிதுனம்: இன்று உங்களுக்கு சிறப்பான நாள். புத்திசாலித்தனமான போக்கு உங்கள் செயல்களில் வெற்றியை பெற்றுத் தரும். சுதந்திரமான கண்ணோட்டத்தை பராமரிப்பதன் காரணமாக நீங்கள் உகந்த முடிவை எடுப்பீர்கள்.

கடகம் : பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு நீங்கள் பொறுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். வதந்திகளை தவிர்க்கவும். உங்கள் பணியில் சாதகமான பலன்கள் காண நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும்.

சிம்மம்: இன்று உங்களின் தன்னம்பிக்கை குறைந்து காணப்படுவதால் சற்று மந்தமான நாளாக இருக்கும். நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

கன்னி: இன்று உங்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி அதில் வெற்றியடைவீர்கள் .நீங்கள் சாதிக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். அதற்காக உங்களை தொடர்ந்து மேம் படுத்திக் கொள்வீர்கள்.

துலாம்: இன்று சிறந்த பலன்கள் கிடைக்கும் நாள். ஆரம்பத்தில் சில தடைகள் இருந்தாலும் முடிவில் சாதகமான பலனைப் பெறுவீர்கள்.இன்று பணியிடத்தில் நீங்கள் சில மாற்றங்களை சந்திக்க நேரலாம். 

விருச்சிகம்: இன்று நீங்கள் உங்கள் பொதுவான இலக்குகள் நோக்கி செயல்படுவீர்கள். இந்த முயற்சியில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் அறிவார்ந்த முறையில் பணி செய்து பணியில் வெற்றி பெறுவீர்கள்.

தனுசு: சில ஆரம்ப கால தடைகளுக்குப் பின் உங்கள் இலக்குகளை பூர்த்தி செய்வீர்கள். இதற்கு சில கூடுதல் முயற்சி தேவைப்படும். இன்றைய நாளின் முடிவில் வெற்றி காண்பீர்கள்.

மகரம்: இன்று நீங்கள் வளர்ச்சி காண்பீர்கள். உங்கள் ஆற்றலை நன்கு உணர்ந்து செயல்படுவீர்கள். உங்கள் தகவல்தொடர்பு திறமையால் நீங்கள் புகழடைவீர்கள். உங்கள் திறமை மூலம் நீங்கள் பணியில் வெற்றி காண்பீர்கள்.

கும்பம்: இன்று நீங்கள் அனுகூலமான முடிவுகள் எடுக்க மனதில் தெளிவுடன் இருக்க வேண்டும். இன்று நெருங்கியவர்களுடன் உரையாடுவதில் கூட உங்களிடம் தயக்கம் காணப்படும். இன்று அதிக பணிகள் காணப்படும்.

மீனம்: நீங்கள் செய்யும் செயல்களில் திருப்தி கிடைக்க திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். இதன் மூலம் பாதுகாப்பின்மை உணர்வை நீங்கள் சமாளிக்கலாம். பணியிடத்தில் உங்கள் மேலதிகாரிகளால் சில பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.