TNPSC குரூப்-4 போட்டித்தேர்வு: பார்வையற்றோருக்கு இலவச பயிற்சி வகுப்புகள் டிச-28 ஆரம்பம்

TNPSC குரூப்-4 போட்டித்தேர்வு: பார்வையற்றோருக்கு இலவச பயிற்சி வகுப்புகள் டிச-28 ஆரம்பம்

மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலை வாய்ப்பு மையம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

2018, பிப்ரவரி-11 ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக அரசுத் தேர்வாணைய குரூப்-4 போட்டித்தேர்வுகளில் பங்கேற்க உள்ள பார்வையற்றோருக்கு மதிய உணவுடன்கூடிய இலவச பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளன.

டிச-28 ஆம் தேதி முதல் வார நாட்களில் இந்த இலவச வகுப்புகள் நடைபெறும். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் , பார்வையற்றோருக்கான தேசிய இணையம் மற்றும் டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் ஆகியவை இணைந்து இந்த வகுப்புகளை சென்னை மேற்கு சைதாப்பேட்டை, புதிய எண்.69, விஜிபி சாலை, என்ற முகவரியில் நடத்த உள்ளனர்.

டிச-28 வியாழன் காலை 9-30 மணிக்கு துவக்க நிகழ்ச்சி உள்ளது. விருப்பமுள்ள பார்வையற்றவர்கள் 044-23715491 மற்றும் 9941411017 என்ற எண்களுக்கு தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்வது அவசியம்.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *