#BREAKING : ஜனவரி 9ஆம் தேதி தான் கடைசி.! அரசு அலுவலர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்.!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக நாளை முதல் இரவுநேர ஊரடங்கு அமல் என அரசு அறிவிப்பு.

தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக நாளை முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த புதிய கட்டுப்பாடுகளில், அத்தியாவசிய பணிகளான பால், பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி, ஏ.டி.எம். போன்ற முக்கியமான பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த தமிழக அரசு. அரசு அலுவலகர்களுக்கு கட்டாய தடுப்பூசி கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. வரும் 9ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.