சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தின் மேற்குத் தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு வெற்றி பெற்றதாக திருச்சியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதியன்று நடைபெற்றது.இதில்,திருச்சி மேற்குத் தொகுதியில் திமுகவின் முதன்மைச் செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மீண்டும் போட்டியிட்டார்.அவரை எதிர்த்து அதிமுக சார்பில் வி.பத்மநாதன் போட்டியிட்டார்.
இந்த நிலையில்,நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது,இன்று காலை தொடங்கியுள்ள நிலையில் திருச்சி மேற்குத் தொகுதியில் கே.என்.நேரு வெற்றி பெற்றதாகவும்,அவருக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் திருச்சி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு நேரத்திலேயே போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
தேர்தலில் வெற்றிப் பெற்றால் அதைக் கொண்டாடுவதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.இருப்பினும்,திமுக கட்சியினர் திருச்சி மேற்குத் தொகுதியில் கே.என்.நேரு வெற்றி பெற்றதாகக் கூறி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டி மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இருப்பினும்,கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது கே.என்.நேரு,திருச்சி மேற்குத் தொகுதியில் 92 ஆயிரத்து 49 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Arvind Kejriwal: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசி வழங்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு,…
Hardik Pandya : மும்பை வீரர்கள் குறைகளை உணர்ந்து விளையாடவேண்டும் என்று அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். நேற்று ஏப்ரல் 23-ஆம் தேதி ஜெய்ப்பூர் சவாய்…
Honor Killing : சென்னையில் ஆணவக்கொலை செய்யப்பட்டவரின் மனைவி உயிரிழப்பு. அவரின் தற்கொலை கடிதம் கிடைத்துள்ளது. சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த சர்மிளா எனும் மூன்றாம் ஆண்டு கல்லூரி…
Ghilli : கில்லி படத்தில் பாடல்கள் எல்லாம் ஹிட் ஆகும் என தயாரிப்பாளரிடம் வித்யாசாகர் உறுதியாக கூறி செய்து காட்டியுள்ளார். தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகி…
Gold Price : கடந்த சில நாள்களாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பெருமளவில் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின்…
Helicopter Crash: மலேசியாவின் லுமுட் நகரில் 2 கடற்படை ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில்10 வீரர்கள் பலியாகினர். மலேசியாவில் கடற்படை பயிற்சியின்போது இரு ஹெலிகாப்டர்கள் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது.…