திப்புசுல்தான் பிறந்தநாள் விழா ரத்து – கர்நாடக முதல்வர் எடியூரப்பா அதிரடி அறிவிப்பு!

கர்நாடக அரசு சார்பில் கொண்டாடப்படும் மன்னன் திப்புசுல்தான் பிறந்த விழாவை ரத்து செய்து புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடியூரப்பா அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் கடந்த 2015 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 10 ம் தேதி திப்புசுல்தான் பிறந்தநாள் திப்புசுல்தான் ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில்,கர்நாடக  முதல்வராக பொறுப்பேற்று 1 நாளே ஆன நிலையில் இந்த அறிவிப்பை அறிவித்துள்ளார்.

இந்த விழா நடைபெறுவதால் மக்களிடையே பெரும் வன்முறை ஏற்படுவதாககோரி விராஜ்பேட் தொகுதி எம் எல் ஏ ஆன கே.ஜி போபையா எடியூரப்பாவை சந்தித்து மனு அளித்து இருந்தார். இதை அடுத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த 2015 ம் ஆண்டு திப்புசுல்தான் ஜெயந்தி விழாவில் ஏற்பட்ட வன்முறையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த ஒருவர் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.