மூணாறு நிலச்சரிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக உயர்வு.!

கேரளா மூணாறு அருகே ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக உயர்வு.

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தொடந்து பெய்து வந்த கனமழை காரணமாக  ராஜமலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில் இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை  தேடும் பணி 6-வது நாளாக தொடர்ந்து  தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 தற்போது நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. தற்பொழுது 16 பேர் மாயமாகியுள்ளதால் அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.