வீரமரணம் எய்திய இந்திய வீரர்கள்..எல்லையில் பாக்.,அட்டகாசம்

காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யூனியன் பிரதேசமான காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள நவுகம் என்ற செக்டாரில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலில் இன்று 2 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததனர். பூஞ்ச் மாவட்டத்தில் கிருஷ்ணா காடி பகுதியில் நேற்று நள்ளிரவு அத்துமீறலில் ஈடுபட்ட பாக்.,ராணுவத்தினரிடையே ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் இந்திய வீரர்  ஒருவர் வீரமரணம் அடைந்ததாக இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரி தகவல் தெரிவித்த நிலையில்  இந்த தாக்குதலில் மேலும் 4 வீரர்கள் காயம் அடைந்ததாகவும் மேலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.மேலும் அத்துமீறி இந்திய எல்லைகளை குறிவைக்கும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு, இந்திய ராணுவ தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.



author avatar
Kaliraj