திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த மூன்று நாட்கள் கடைகள் மூடல்

திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த மூன்று நாட்கள் கடைகள் மூடல்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த கொரோனா வைரசால், தமிழகத்தில் 36,841 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 326 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிற நிலையில், அங்கு வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் கடைகளை மூட வணிகர்கள் முடிவு செய்துள்ளனர். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.