டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் திமுக சார்பில் இன்றுபோராட்டம் நடைபெற்றது. சேலத்தில் நடந்த போராட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது, வீரபாண்டி ஆறுமுகம் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி விட்டே இங்கு வந்தேன்.
விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் கோடிக்கணக்கான விவசாய பெருங்குடி மக்களுக்கு தாம் சல்யூட் அடிப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விவசாயிகள் போராட்டம் வெற்றி பெறக் கூடாது என அ.தி.மு.க செயல்படுகிறது.
ஓரவஞ்சனையுடன் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சேலம் போராட்டத்திற்கு கலந்துகொள்ள வந்த விவசாயிகள், திமுகவினர் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார். சுதந்திர இந்தியாவில் இதுவரை இது போன்று ஒரு போராட்டம் நடந்தது இல்லை. விவசாயிகள் போராட்டத்தின் மூலம் பா.ஜ.க அரசை அசைத்து கொண்டிருக்கிறார்கள். தி.மு.க. விரைவில் ஆட்சிக்கு வரப்போகிறது என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
டெல்லியில் போராடும் விவசாயிகளை மத்திய அரசு உடனடியாக அழைத்து பேச வேண்டும். அவசர அவசரமாக வேளாண் சட்டத்தை நிறைவேற்றியது பா.ஜ.க அரசு. சீப்பை மறைத்து வைத்துவிட்டால் திருமணம் நின்றுவிடாது. இது திமுக போராட்டம் அல்ல; விவசாயிகளுக்கான போராட்டம் என்பதை ஆளுங்கட்சி புரிந்துகொள்ள வேண்டும்.
மோடியின் வாக்குறுதியை நம்பி விவசாயிகள் வாக்களித்தார்கள் அதற்கு அவர் கொடுக்கும் பரிசுதான் மூன்று வேளாண் சட்டங்கள். விவசாயிகளுக்கு ஆதரவாக சட்டமன்றத்தை கூட்டி வேளாண் சட்டத்திற்கு எதிராக சட்டம் நிறைவேற்றினால் எடப்பாடி பழனிசாமி க்கு பாவமன்னிப்பு கிடைக்கும். இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் வரையில் போராட்டம் தொடர வேண்டும்.
Soori : தனது பெயர் விடுபட்டதால் வாக்களிக்க முடியவில்லை என நடிகர் சூரி வேதனையுடன் பேசியுள்ளார். இன்று (ஏப்ரல் 19) -ஆம் தேதி நாடு முழுவதும் மக்களவை…
Amla juice- நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இப்பதிவில் அறியலாம் . நெல்லிக்காய் : ஆயுளை வளர்க்கும் கனி எனவும் நெல்லிக்கனி அழைக்கப்படுகிறது. ஏழைகளின்…
Election2024: தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று…
Painting idea-ஓவ்வொரு நிறங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது அது என்னவென்று இப்பதிவில் காண்போம். வண்ணங்களுக்கு ஏற்றார் போல் தான் நம் எண்ணங்களும் பிரதிபலிக்கும். ஆமாங்க.. நம் மனநிலையை…
ஐபிஎல் 2024 : லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் எம்.எஸ்.தோனியை புகழ்ந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ்க்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் 33-வது போட்டியாக…
Vivo V30e : வி30இ 5ஜி போன் எப்போது இந்தியாவில் அறிமுகம் ஆகும் என்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விவோ நிறுவனம் அடுத்ததாக வி30இ 5ஜி (vivo V30e…