தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு ஆவணங்கள் சிபிஐ – யிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த மீ மாதம் தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது 13 உயிர்கள் பரிதாபமாக சுட்டு கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு ஆவணங்கள் சிபிஐ – யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீசார் 207 வழக்கு ஆவணங்களை சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.