இந்த வருடம் இரண்டாவது முறை முழு கொள்ளளவை எட்டியது !!!! வீராணம் ஏரி !!

கடலூர்  மாவட்டத்தில் வீராணம் என்னும் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு வடவாறு வழியாக வினாடிக்கு 900 கன அடி நீர் வரத்து உள்ளது. வீராணம் ஏரி சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த ஆண்டில் வீராணம் ஏரி இரண்டாவது முறையாக நிரம்பியுள்ளது. அதாவது தனது முழு கொள்ளளவு 47.50 அடியை எட்டியுள்ளது. இதனை கேட்ட விவசாயிகளும் , மக்களும் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

மேலும் இந்த ஏரியில் இருந்து விவசாயத்திற்கு சுமார் 580 கன அடி நீர் செல்கிறது. மேலும் சென்னை குடிநீர் தேவைக்காக சுமார் 44 கன அடி நீர் செல்கிறது. மேலும் இந்த வீராணம் ஏரி கடந்த ஆண்டு முழு கொள்ளளவை 5 முறை எட்டியுள்ளது.

Leave a Comment