இந்த முறை தாமரை தான் மலரும் – மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி!

மேற்கு வங்கத்தில் இந்த முறை நிச்சயம் தாமரை தான் மலரும் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அவர்கள் விமர்சித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விறுவிறுப்பான பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து எம்எல்ஏக்கள், மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் என 50க்கும் மேற்பட்டவர்கள் கட்சியிலிருந்து விலகி பாஜக மற்றும் பிற கட்சிகளில் இணைந்துள்ள நிலையில், பெரும் நெருக்கடியை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சந்தித்து வருகிறது.

இந்நிலையில் பஞ்ச்போட்டா பகுதியில் பாஜக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகன பேரணியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அவர்கள் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், மம்தா பானர்ஜியின் ஆட்சியை வன்முறை வரையறுத்துள்ளது எனவும், இந்த முறை சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து வெற்றி பெறுவதற்கான முடிவு செய்து உள்ளோம் எனவும், பேரணிகளில் மக்கள் அதிகம் கலந்து கொள்வதை வைத்து தெரிகிறது மேற்கு வங்கத்தில் இந்த முறை நிச்சயம் தாமரை தான் மலரும் எனவும் கூறியுள்ளார்.

author avatar
Rebekal