திமுகவுக்கு இந்த முறை அது எடுபடாது – முதல்வர் பழனிசாமி

திமுகவுக்கு இந்த முறை அது எடுபடாது – முதல்வர் பழனிசாமி

அதிமுக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் கட்சியாக உள்ளது என கரூரில் முதல்வர் பழனிசாமி பரப்புரையில் தெரிவித்துள்ளார்.

கரூரில் அதிமுக சார்பில் வெற்றிநடை போடும் தமிழகம் என்ற தேர்தல் பரப்புரையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பொய் பேசியே ஆட்சிக்கு வந்த திமுகவுக்கு இந்தமுறை அது எடுபடாது என விமர்சித்துள்ளார். மக்களவை தேர்தலின்போது எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வாங்கிய மனு என்ன ஆனது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக மீது எவ்வளவு குற்றசாட்டு கூறினாலும் அதை பொய் என நிரூபிப்போம் என்றும் திமுக ஆட்சியில் 220 டெண்டர்கள் ஒருவருக்கே கொடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். நான் முதல்வர் என்று எப்போதும் நினைத்து பார்த்ததில்லை, மக்கள் தான் முதல்வர் என்றும் அதிமுக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் கட்சியாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube