உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது இதற்காக தான்! இயக்குனர் சீனுராமசாமி விளக்கம்!

உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது இதற்காக தான்.

நடிகர் விஜய்சேதுபதி  இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாக இருந்த 800 படத்தில் நடப்பதற்கு தமிழகத்தில் கடும் எதிப்பு கிளம்பியது. எதிர்ப்பினை தொடர்ந்து, விஜய்சேதுபதி, இந்த படத்தில் இருந்து விலகினார்.

இந்நிலையில், இயக்குநர் சீனுராமசமி  செய்தியாளர் சந்திப்பில் தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, விஜய்சேதுபதிக்கு எதிராக ட்வீட் செய்ததாக தொடர்ந்து மிரட்டல் வருகிறது. விஜய்சேதுபதிக்கும், எனக்கும் தனிப்பட்ட பிரச்சனை என சித்தரித்துள்ளனர்  வாட்ஸப் மூலமும், போனிலும் தொடர்ந்து மிரட்டல் வந்துகொண்டு இருக்கின்றன. சமூக வலைத்தளங்களில் ஆபாச வார்த்தைகளால், என்னை திட்டுகின்றனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், குடும்பத்துடன் வசிக்கும் எனக்கு இதுபோன்ற மிரட்டல்கள் தொடர்ந்து வருவதால், முதல்வர் கவனத்துக்கு உடனே கொண்டு செல்ல விரும்பினேன். யார் இதுபோன்ற செயல்களை செய்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளேன் என்றும் விளக்கம அளித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.