இது திமுக கூட்டம் , எங்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது….விளாசிய ஸ்டாலின்…!!

சென்னையில் நடைபெற்ற திமுக_வின் முன்னாள் தலைவர் மு.கருணாநிதி சிலை திறப்பு விழாவில் முக.ஸ்டாலின் இந்தியாவின் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி வரவேண்டுமென்று முன்மொழிவதாக அறிவித்தார். இது தேசிய அரசியலில் பல்வேறு விவாதங்களை எழுப்பியது.

திமுக தலைவர் முக.ஸ்டாலின் ராகுல் தான் பிரதமர் என்று ஏன் அறிவித்தார் என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பினர்.இந்நிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது முக.ஸ்டாலின் பேசுகையில்  , எல்லா பத்திரிக்கையிலும் , தொலைக்காட்சியிலும் சென்னையில் நடைபெற்ற விழாவில் , எல்லா கட்சி தலைவர்களை மேடையில் உக்கர வைத்துக்கொண்டு பிரதமர்  ராகுல் தன என்று அறிவித்தார் , அப்படி அறிவிக்கலாமா..? என்று கேட்கின்றனர்.

இதற்க்கு பதிலளிக்கும் வகையில் பேசிய ஸ்டாலின் நேற்று மேற்கு வங்கம் சென்று பேசிய ஸ்டாலின் பிரதமர் ராகுல் என்று ஏன் சொல்லவில்லை என்று விவாதிக்கிறார்கள்.சென்னையில் நடைபெற்றது திமுக நடத்திய கூட்டம்.அதில் எங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கின்றது.தமிழக மக்கள் சார்பில் அவர்களின் எதிர்பார்ப்பை எங்கள் கட்சி கூட்டத்தில் நான் தெரிவித்தேன் இதில் என்ன தவறு இருக்க்கின்றது என்று முக.ஸ்டாலின் பேசினார்.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment