இது இயற்கை அன்னை நமக்கு கொடுத்த எச்சரிக்கையும் கூட..! – உமாபாரதி

இயற்கை பேரிடர் நமக்கு பெருத்த சோகத்தையும், நீங்கா வழிகளைக் கொடுத்துள்ளது. அதே நேரத்தில் இது இயற்கை அன்னை நமக்கு கொடுத்த எச்சரிக்கையும் கூட.

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில், தபோவான் ரிஷி கங்கா நதியில் உள்ள ரிஷிகங்கா மின் திட்டத்திற்கு அருகே ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் வந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஆற்றின் கரையோரம் அமைந்திருந்த வீடுகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வெள்ளத்தில் 100-க்கும் மேற்பட்டோர் அடித்து செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தலைவர்களில் ஒருவருமான உமாபாரதி, உத்தரகாண்ட் சம்பவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நான் மத்திய அமைச்சராக இருந்தபோது கங்கை நதி மற்றும் அதன் துணை நதிகளில் மின் திட்டங்கள் குறித்து அமைச்சகத்தின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டிந்தது. குறிப்பாக இமயமலையில் அமைந்துள்ள உத்தரகாண்டில் சென்சிட்டிவான பகுதி என அறிவித்து இருந்தோம். இந்த இயற்கை பேரிடர் நமக்கு பெருத்த சோகத்தையும், நீங்கா வழிகளைக் கொடுத்துள்ளது. அதே நேரத்தில் இது இயற்கை அன்னை நமக்கு கொடுத்த எச்சரிக்கையும் கூட.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.