இதுவும் திரில்லர் களமே! அருள்நிதியின் அடுத்த களம்!

நடிகர் அருள்நிதி பிரபலமான இந்திய நடிகராவார். இவர் தமிழில் வம்சம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது இவர் ஜீவாவுடன் இணைந்து, களத்தில் சந்திப்போம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து, இவர் அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த படமும் திரில்லர் களமே என இன்னாசி தெரிவித்துள்ளார். நடிகர் அருள்நிதி எப்போதுமே த்ரில்லர் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.