ஒத்திவைக்கப்பட்டுள்ள திருவாரூர் பல்கலை கழக தேர்வுகள்!

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் போடப்பட்டுள்ள 144 ஊரடங்கு உத்தரவு தற்போது வரை அமலில் உள்ளதால், பல்வேறு கடைகள், கல்விக்கூடங்கள் ஆலயங்கள் என அனைத்துமே மூடப்பட்ட நிலையில் உள்ளன. இந்நிலையில், திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகம் ஏற்கனவே மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் 27-ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது.

தற்போது இப்பல்கலைகழகத்தின் மூலம் நடக்கவிருந்த தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பதிவாளர் புவனேஸ்வரி அவர்கள் அறிவித்துள்ளார். தேதியும் பல்கலைக்கழகம் என்று திறக்கப்படும் என்றும் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

author avatar
Rebekal