திருவாரூர் இடைத் தேர்தல்: இன்று மாலைக்குள் அறிக்கை அளிக்க வேண்டும்…! தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு

திருவாரூர் இடைத் தேர்தல்: இன்று மாலைக்குள் அறிக்கை அளிக்க வேண்டும்…! தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு

திருவாரூர் இடைத் தேர்தல் தொடர்பாக, இன்று மாலைக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு :

 

பின் ஜனவரி 28-ஆம் தேதி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேலும் வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 10ம் தேதி தொடங்கும்.அதேபோல் ஜனவரி 31-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இடைத்தேர்தலுக்கான மனுதாக்கல் ஜனவரி 3-ஆம் தேதியும், மனுதாக்கல் செய்ய இறுதி நாள் ஜனவரி 10-ஆம் தேதி என்றும், ஜனவரி 11-ஆம் தேதி முதல் வேட்பு மனுக்களை பெறலாம் என்றும், மனுக்களை திரும்பப் பெற ஜனவரி 14-ஆம் தேதி இறுதி நாள் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதில்  திருவாரூர் இடைத் தேர்தல் தொடர்பாக, இன்று மாலைக்குள் அறிக்கை அளிக்க வேண்டும். மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறிக்கை கிடைத்ததும் தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *