சிறந்த செல்ஃபிக்கு நல்ல பரிசு வழங்கப்படும்! ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!

  • ஜனவரி 24ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
  • இதனை கொண்டாடும் விதமாக திருவண்ணாமலைஆட்சியர் செல்பி போட்டி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஜனவரி மாதம் 24ஆம் தேதி ஆண்டு முழுவதும் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை தற்போதைய ட்ரெண்டில் கொண்டாட திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி புதிய போட்டியை அறிவித்துள்ளார். அந்த போட்டிக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

திருவண்ணாமலை ஆட்சியர் அறிவிப்பில், ‘ மூன்று தலைமுறை பெண்களுடன் அதாவது பாட்டி, அம்மா மற்றும் தற்போதைய தலைமுறை என மூன்று தலைமுறை பெண்களுடன் இருக்கும் செல்பி புகைப்படத்தை 7397285643 என்ற எண்ணிற்கு அனுப்பிவைக்க வேண்டும். அப்படி, அனுப்பிவைக்கப்பட்ட புகைப்படங்களில் சிறந்த செல்பி புகைப்படத்திற்கு பரிசு வழங்கப்படும்’ என திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி அறிந்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.