திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு,திருநீறு,ருத்ராட்ச மாலை ! சர்ச்சையை ஏற்படுத்திய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்

தஞ்சை பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு, திருநீறு மற்றும் ருத்ராட்ச மாலை அணிவித்தார்  அர்ஜுன் சம்பத்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக பாஜக ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவருக்கு விபூதி மற்றும் காவி உடை அணிவித்து புகைப்படம் பதிவிடப்பட்டது. இதனை தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டியில்  உள்ள திருவள்ளுவர் மீது மர்ம நபர்கள் சாணி பூசினார்கள்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தஞ்சை பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை உள்ள இடத்திற்கு சென்றார்.அங்கு அவமரியாதை செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு திருநீறு பூசி, ருத்ராட்சம் மாலை, காவித் துண்டு அணிவித்து பூஜை செய்தார் அர்ஜுன் சம்பத்.இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.