திருவள்ளூர் : மர குடோனில் தீ விபத்து! 7 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்க முயற்சி!

  • திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஓர் தனியார் மர குடோனில் 3 குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, 
  • இந்த தீயை அணைக்க 7 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகிறது. 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்குன்றம் நகருக்கு அருகே தண்டல்கழனியில் உள்ள மரகுடோனில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 8 குடோன்கள் உள்ளன. அதில் தற்போது வரை 3 குடோனில் உள்ள அட்டைப்பெட்டிகள் மற்றும் மரச்சாமான்களில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீவிபத்தை கட்டுக்குள் கொண்டு வர சுற்றுவட்டாரத்தில் இருந்து 7 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 7 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகிறது. தீ அடுத்தடுத்த குடோன்களில் பரவாமல் தடுக்கப்பட்டு வருகிறது.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.