குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்து வரும் எம்.பி திருமாவளவன்!

  • குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 
  • நேற்று திமுகவினர் கோலம் வரைந்து அதன் மூலம் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர். 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கும், குடிமக்கள் சட்டத்திற்கும் எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்திலும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி மற்றும் பல திமுகவினர் தங்கள் வீட்டு வாசலில் கோலம் வரைந்து அதில் வேண்டாம் CAA,  வேண்டாம் NRC ஆகிய வாசகங்களை எழுதி குடியுரிமை சட்டம், குடிமக்ககள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் மக்களைவை  தொகுதி எம்பியான திருமாவளவன், தற்போது சென்னை வேளச்சேரியில் கோலம் போட்டு அதன் மூலம் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் குடிமக்கள் பதிவேடு சட்டம் ஆகியவற்றிற்குக்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.