கடந்த சில நாட்களாக தமிழகமெங்கும் தொடர்மழை பெய்து வருகிறது. இதனையடுத்து திருமங்கலம் பகுதிகளிலும் கடந்த 10 நாட்களாக மழை பெய்து வருகிறது. திருமங்கலம் தாலுகா பகுதிகளில் 58 கண்மாய்களுக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அங்குள்ள 6 கண்மாய்கள் நிரம்பின.