வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்.! தமிழக அரசின் நடவடிக்கை திருப்தி.! பீகார் குழு பேட்டி.!

வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுத்தது தங்களுக்கு திருப்திகரமாக இருந்தது. –  பீகார் குழு அதிகாரிகள்.

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான வதந்திகள் அண்மையில் பரவியதால் வடமாநிலத்தவர்கள் வேலை செய்யும் பல்வேறு இடங்களில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதனை கட்டுக்குள் கொண்டு வர அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொன்டு வருகிறது.

பீகார் ஆய்வு குழு : இந்நிலையில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவின் பெயரில், பீகார் மாநில அரசு அதிகாரிகள் தமிழகம் வந்து திருப்பூர், கோவை, சென்னையில் உள்ள வடமாநிலத்தவர்களிடமும், அங்குள்ள தொழிற்சாலை நிறுவன அதிகாரிகளுடனும் கருத்துக்களை கேட்டறிந்தனர். 

ஆலோசனை : அதனை அடுத்து , இன்று சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலர் இறையன்பு உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பீகார் குழு அதிகாரிகள் பேட்டியளித்தனர்.

தொழிலாளர்களின் நிலை : அதில், திருப்பூர், கோவை, சென்னையில் உள்ள அரசு உயர் அதிகாரிகளிடம் தற்போது உள்ள நிலை குறித்து கேட்டறிந்தோம், தொழிற்சாலையில் உள்ள நிர்வாகிகளிடம் தொழிலாளர்களின் நிலை குறித்து கேட்டறிந்தோம்.

திருப்திகாரமான நடவடிக்கை : அதே போல, பீகார் தொழிலாளர்கள் பலரிடம் அவர்களின் கருத்துக்களையும், தற்போது உள்ள நிலை குறித்தும் கேட்டறிந்தோம். வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுத்தது தங்களுக்கு திருப்திகரமாக இருந்தது என பீகார் குழு அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment