இந்த பழக்கவழக்கங்கள் கொண்ட பெண்களுக்கு வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்..!

இந்த பழக்கவழக்கங்கள் கொண்ட பெண்களுக்கு வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்.

பெண்களின் ஆளுமை மற்றும் இயல்புகளைப் புரிந்துகொள்வது கடினம் . ஆச்சார்யா சாணக்யா கூறுகையில், பெண்கள் எப்போது மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், எப்போது சோகமாக இருக்கிறார்கள் என்பதை அறிவது கடினமான காரியம். பெண்களின் இயல்பைப் புரிந்துகொள்வது உலகில் மிகவும் கடினமான பணிகளில் ஒன்றாகும் என்று கூறியிருக்கிறார். சாணக்கியர் நீதி சாஸ்திரத்தில் சில பழக்கவழக்கங்களைச் சொல்லியிருக்கிறார், இது பெண்களின் இயல்பு மற்றும் ஆளுமையைப் பற்றி புரிந்து கொள்ள உதவும்.

கடவுள் பக்தி உடைய பெண்கள்: கடவுள் பக்தியில் ஆர்வம் கொண்ட பெண்களின் மனம் அமைதியாக இருக்கும். அத்தகைய பெண்கள் முன்னேற்றம் அல்லது வெற்றியைப் பெறுவதில் மட்டும் கவனம் செலுத்துகிறார்கள். மேலும் மற்றவர்களின் வெற்றி அல்லது தோல்வி அத்தகைய பெண்களைத் தொந்தரவு செய்யாது. அவள் தன் வாழ்க்கையின் நோக்கத்தில் மட்டுமே மூழ்கி இருப்பார்கள்.

சோம்பேறி: சோம்பேறித்தனம் நிறைந்த பெண்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவது கடினம். அத்தகைய பெண்கள் வெற்றியைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்கள் இவர்களுக்கு அதிக அன்பு கொடுத்தாலும் இவர்கள் அவர்களுக்கு மரியாதையாக இருக்க மாட்டார்கள். மேலும் இத்தகைய பெண்களுக்கு சமூகத்தில் மரியாதையும் கிடைப்பதில்லை.

ஒழுக்கம்: ஒழுக்கத்தை கடைபிடிக்கும் பெண்கள் விரைவில் வெற்றியை அடைவார்கள். அத்தகைய பெண்கள் மற்றவர்களுக்கு உத்வேகமாக, முன் உதாரணமாக இருப்பார்கள். இந்த இயல்புடைய பெண்கள் தங்கள் கனவுகள் மற்றும் பணிகளை நிறைவேற்றுவதன் மூலம் குடும்ப உறுப்பினர்களுடன் சமூகத்தில் மிகுந்த மரியாதையைப் பெறுகிறார்கள்.

பொறாமை: பொறாமை உணர்வு கொண்ட பெண்கள், தந்திரத்தால் முன்னேற்றம் அடைவார்கள் என்று நம்பப்படுகிறது. அத்தகைய பெண்கள் மற்றவர்களின் வெற்றிக்கு தடையாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. அத்தகைய பெண்களை நம்புவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் நேரம் வரும்போது நீங்களும் துரோகத்திற்கு ஆளாகலாம்.