இவர்களால் தான் இன்று இந்தியாவின் வயிறு இறந்து விடாமல் இருக்கிறது – கவிஞர் வைரமுத்து

இன்று இந்தியாவின் வயிறு இறந்துவிடாமல் இருக்க காரணம் உழவர்கள் தான். 

கவிஞர் வைர முத்து தமிழ் திரைப்பட பாடலாசிரியர் ஆவார். இவர் பல திரைப்படங்களுக்கு பாடல் எழுதி, பல விருதுகள் பெற்ற கவிஞர். இவர் சினிமாவில் மீது மாட்டும் அக்கறையை செலுத்தாமல், சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டவராக வலம் வருகிறார். 

இந்நிலையில், இவர் தன் இணைய பக்கத்தில், ‘இந்திய உணவுக் களஞ்சியத்தை வழிய வழிய நிரப்பிக் கொடுத்தவர்கள் உழவர்கள். அதனால்தான் இன்று இந்தியாவின் வயிறு இறந்துவிடாமல் இருக்கிறது. இலவச மின்சாரத்தைத் துண்டித்தால் கொரோனாவின் எதிர்கால அலைகளை எதிர்கொள்ள முடியாது. சிறப்போடு ஆள நினைப்பவர்கள் பொறுப்போடு சிந்திக்க வேண்டும்.’ என்று மத்திய அரசிற்கு வாலியுறுத்தியுள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.