20 ஓவர் போட்டியில் இந்த 3 வீரர்கள் இரட்டை சதம் அடிப்பார்கள்.! யுவராஜ் சிங்கின் லிஸ்ட்.!

20 ஓவர் போட்டியில் இந்த 3 வீரர்கள் இரட்டை சதம் அடிப்பார்கள்.! யுவராஜ் சிங்கின் லிஸ்ட்.!

  • 20 ஓவர் போட்டியில் 3 வீரர்களால் இரட்டை சதம் அடிக்க முடியும் என்று யுவராஜ்சிங்  தெரிவித்துள்ளார். இரட்டை சதம் அடிப்பது மிகவும் கடினமானது என்பதை என்னால் உணர முடிகிறது. ஆனால் தற்போது அதிரடியாக விளையாடி வருவதை பார்த்தால் எதுவும் சாத்தியமில்லை என கூற முடியாது என தெரிவித்தார்.

இந்திய அணியின் ஆல்-ரவுண்டராக இருந்த யுவராஜ் சிங் கடந்த ஆண்டு அனைத்து விதமான  போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்பின் கனடாவில் நடைபெற்ற குளோபல் டி20 போட்டிகளில் விளையாடினார். தற்போது ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயிக்கு நிதி திரட்டும் வகையில், நடைபெற்ற புஷ்ஃபயர் கிரிக்கெட் போட்டியில் யுவராஜ் சிங் கலந்துகொண்டு விளையாடினார். கடந்த 2007-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் 6 சிக்சர்களை அடித்து சாதனை படைத்தார். மேலும், 20 ஓவர் சர்வதேச போட்டியில் 12 பந்தில் அரை சதத்தை அடித்து சாதனை புரிந்தார்.

இந்நிலையில், 20 ஓவர் போட்டியில் 3 வீரர்களால் இரட்டை சதம் அடிக்க முடியும் என்று யுவராஜ்சிங் தற்போது தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், ரோஹித் சர்மா, டிவில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல் இவர்கள் மூவரும் டி20 போட்டியில் இரட்டை சதம் அடிக்க வாய்ப்புள்ளது, ஆனால் இதில் இருவர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர் என தெரிவித்தார். மேலும், 20 ஓவர் போட்டியில் இரட்டை சதம் அடிப்பது மிகவும் கடினமானது என்பதை என்னால் உணர முடிகிறது. ஆனால் அது சாத்தியமில்லை என்று என்னால் சொல்ல முடியும். தற்போது நடைபெற்று வரும் போட்டிகளில் அதிரடியான ஆட்டத்தை பார்க்கும் போது முடியாதது எதுவுமில்லை, அதனால் காத்திருப்போம் என்றும் சிறந்ததை எதிர்பார்ப்போம் என்றும் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube