“பிப்ரவரி வரை கொரோனா தொற்று அதிகரிப்பு இருக்கும்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி மாதம் வரை கொரோனா தொற்று அதிகரிக்கும் என்றும்,எனினும்,கொரோனா பற்றி மக்கள் அச்சப்படுவது அவசியமற்ற ஒன்று எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரானா அச்சத்தின் காரணமாக மதுரையின் கல்லுமேடு அருகே எம்ஜிஆர் காலனியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சாணி பவுடர் சாப்பிட்டு தற்கொலை செய்ய முயன்று,அதில் கொரோனா தொற்று உறுதியான பெண்,சிறுவன் உட்பட 2 பேர் பலியான நிலையில்,மேலும் 2 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,மதுரையில் கொரோனா அச்சத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நான்கு பேரில் 2 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என்றும்,பிப்ரவரி மாதம் வரை கொரோனா தொற்று அதிகரிக்கும் என்றும்,எனினும்,கொரோனா பற்றி மக்கள் அச்சப்படுவது அவசியமற்ற ஒன்று எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக,செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது:

தமிழகத்தில் சாணி பவுடர் விற்பனைக்கு விரைவில் தடை கொண்டு வரப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தோம்.இந்த நிலையில், மதுரையில் கொரோனா அச்சத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நான்கு பேரில் 2 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சி மற்றும் வருத்தம் அளிக்கிறது.கொரோனா வந்து விடும் என்பதற்காக தற்கொலை முயற்சி என்பது தேவையற்ற ஒன்று.எதுவாக இருந்தாலும் அதை எதிர்த்து வாழ்வதுதான் மனித வாழ்க்கையின் சிறப்பான விசயம்.எனவே,கொரோனா அச்சமோ,அது வந்து விட்டால் என்ன ஆகுமோ என்பது அவசியமற்ற ஒன்று.

ஒமைக்ரான் உலக அளவில் 27 லட்சம் அளவில் பரவியிருந்தாலும்,பெரிய அளவில் உயிர் பாதிப்பு இல்லை.எனவே,இதற்காக பயந்து தங்களது இன்னுயிரை மாய்த்து கொள்வது அவசியமற்றது.

மேலும்,கொரோனா தொற்று எண்ணிக்கை கடந்த 5 நாட்களாக அதிகரித்து வருகிறது.அந்த வகையில் ஒவ்வொரு நாளும் இரண்டாயிரம் அளவுக்கு உயருகிறது.எனவே,தொற்று அதிகரிக்கும் சூழலில் தமிழக அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு தவிர்க்க முடியாத ஒன்று.அந்த வகையில், வாரத்திற்கு ஒரு நாள் முழு ஊரடங்கு தற்போதைய சூழலில் அவசியமாக உள்ளது.

பிப்ரவரி வரை தொற்று அதிகரிப்பு இருக்கும் என்ற கணிப்பு இருக்கிறது.இது உச்சபட்ச நேரம் என்பதால் கவனம் தேவை.மேலும்,கொரோனாவைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் அரசு எடுத்து வருகிறது.

எனினும்,மக்கள் முகக்கவசம் அணிதல்,சமூக இடைவெளியை பின்பற்றுதல் அவசியம்.கொரோனா உயிரிழப்பை தடுக்க கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் வேண்டும்”,என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Recent Posts

ஒப்புகை சீட்டு வழக்கு – தேர்தல் ஆணைய அதிகாரி ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு!

supreme court: ஒப்புகை சீட்டுகளை எண்ணக் கோரிய வழக்கில் தேர்தல் ஆணைய அதிகாரி ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மக்களவை தேர்தல் தொடங்கியுள்ள நிலையில் விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும்…

19 mins ago

ஏழைகளுக்கான சொத்து பகிர்வு.., அமெரிக்காவை பின்பற்றும் காங்கிரஸ் வாக்குறுதி.?

Congress Manifesto : காங்கிரசின் சொத்து பகிர்வு வாக்குறுதி குறித்து இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா விளக்கம் அளித்துள்ளார்.  நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் கட்சி…

39 mins ago

ராகுல் காந்திக்கு டிஎன்ஏ சோதனை… கேரள எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!

Kerala: ராகுல் காந்திக்கு டிஎன்ஏ சோதனை செய்ய வேண்டும் என்று கேரளா எம்எல்ஏ கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக…

2 hours ago

மஞ்சும்மல் பாய்ஸ் நடிகருடன் டும்..டும்..டும்…அபர்ணா தாஸ் திருமண க்ளிக்ஸ்.!

Aparna Das Marriage:  மலையாள சினிமாவின் அபர்ணா தாஸ் மற்றும் தீபக் பரமா பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சமீபத்தில் நிச்சயதார்த்த விழா முடிந்து காதலை அறிவித்த…

2 hours ago

நாட்டுக்காக தாலியை பறிகொடுத்தவர் தனது தாய்..பிரதமருக்கு பிரியங்கா காந்தி காட்டமான பதில்.!

Priyanka Gandhi: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் தாலியை திருடிவிடும் என மோடி விமர்சித்த நிலையில், காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தி காட்டமாக பதில் கூறியுள்ளது.…

3 hours ago

எங்கள் தோல்விக்கு இதுதான் முக்கிய காரணம்… ருதுராஜ் கெய்க்வாட்!

ஐபிஎல் 2024: நேற்றை நடைபெற்ற போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான தோல்வி குறித்து சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டியளித்தார். கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கிய…

3 hours ago