கோடநாடு விவகாரத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது -மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

கோடநாடு விவகாரத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது -மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

கோடநாடு விவகாரத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், சட்டப்பேரவை கூட்டத்தில் சரியாக செயல்படாதவர்கள் கிராமசபை கூட்டத்தை நடத்தி வருகிறார்கள். மக்களவை தேர்தலில் வெற்றி பெற முடியாது என நினைத்ததால் கிராமசபை கூட்டத்தை திமுக நடத்துகிறது. பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற பயிற்சி எடுத்து வருபவர்களுக்கு வாழ்த்துகள்.கோடநாடு விவகாரத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது. இப்போது வெளிவர வேண்டிய அவசியம் என்ன? கோடநாடு விவகாரத்தின் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பின்னணியில் யார் என தமிழக அரசு கண்டுபிடிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *