அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் டயர் பற்றாக்குறை இல்லை என போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
டயர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாக செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து, போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கூறுகையில், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் டயர் பற்றாக்குறை இல்லை. டயர்கள் மற்றும் ரீட்ரெடிங் பொருள்கள் போதுமான அளவில் இருப்பதால் பேருந்துகளை சீராக இயக்க முடியும். தீபாவளி பண்டிகையின் போது அனைத்து தடப்பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகளை சீராக இயக்க முடியும்.