பிரதமர் வேட்பாளரை பற்றி குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை -விசிக தலைவர் திருமாவளவன்

பிரதமர் வேட்பாளரை பற்றி குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்று  விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில்,  மம்தா பானர்ஜி மத சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கும் மாநாட்டை நடத்தினாரே தவிர , பிரதமர் வேட்பாளரை அறிவிக்கும் மாநாட்டினை நடத்தவில்லை. நாடாளுமன்ற தேர்தல் நாளே குறிப்பிடாத போது, பிரதமர் வேட்பாளரை பற்றி குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை.

ஓபிஸ் அவரது வீட்டில் – யாகம் வளர்ப்பார் என்றால் அது குறித்து நாம் எதுவும் கறுத்து கூற முடியாது. ஆனால் அவர் ஒட்டு மொத்த மக்களுக்கும் சொந்தமான தலைமை செயலகத்தில் யாகம் வளர்த்தது அதிர்ச்சியை அளிக்கிறது.இதனை விசிக வன்மையாக கண்டிக்கிறது என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment