தோனி கேப்டன் பணியில் குறுக்கு வழியே கிடையாது – எல்.பாலாஜி.!

தோனி கேப்டன் பணியில் குறுக்கு வழியே கிடையாது  என்று எல்.பாலாஜி கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டியை தாற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், பிசிசிஐ இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்தது.

அதன்படி போட்டி வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள இந்தாண்டு ஐபிஎல் போட்டிகாக அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஆகஸ்ட் 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை பயிற்சி நடைபெறும் என்று கூறப்படுகிறது, மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சியாளர் எல்.பாலாஜி சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிரிக்கெட் வீரர்கள் நீண்ட நாள் கிரிக்கெட் விளையாடாமல் இருந்ததால் மீண்டும் சிறப்பாக விளையாடுவது ஒன்றும் அவர்களுக்கு சிரமம் இல்லை அவர் எப்பொழுதுமே சிறப்பாக விளையாடுவார்கள்.

மேலும் அணியில் சீனியர் வீரர்கள் இருப்பது பலவீனம் அல்ல அது அவர்களுக்கு பலமே. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனியைப் பொறுத்தவரை எப்போதும் சகவீரர்களுக்கு ஆதரவு அளிப்பார் மேலும் கேப்டன் பணியில் குறுக்கு வழி என்பதெல்லாம் அவருக்கு கிடையாது. மேலும் அவசரகதியில் முடிவுகள் எடுக்க மாட்டார், அணியில் உள்ள வீரர்கள் திறமையை நிரூபிக்க வாய்ப்புகளை அனைவர்க்கும் வழங்குவார் என்றும் எல்.பாலாஜி கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.