கட்சியில் எந்த குழப்பமும் இல்லை – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் 

கட்சியில் எந்த குழப்பமும் இல்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்  தெரிவித்துள்ளார்.
அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை என்று அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறியது அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், அதிமுக கட்சியும், ஆட்சியும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் அருமையாக நடந்து வருகிறது. கட்சியில் எந்த குழப்பமும் இல்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்  தெரிவித்துள்ளார்.