கூட்டணியில் குழப்பம் இல்லை – அண்ணாமலை பேட்டி

தமிழகத்தில் பாஜக அதிமுக கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை என அண்ணாமலை பேட்டி. 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று  டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். இதனையடுத்து, டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை திரும்பிய நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் பாஜக அதிமுக கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. அமித்ஷாவுடனான எனது சந்திப்பு வழக்கமானதே. தமிழகத்தில் பாஜக கட்சியை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினோம்.  மக்களின் செல்வாக்கை பெற்று, ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு பாஜக வளர வேண்டும் என்பதே நோக்கம்.

கட்சிகளுக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன

பாஜகவுக்கும், எனக்கும் தனிப்பட்ட கட்சி, தலைவர்கள் மீது மோதல் இல்லை. கட்சியை வலுப்படுத்த நினைக்கும் போது ஒரு சில மனஸ்தாபங்கள் வருவது வழக்கம் தான். கட்சிகளுக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன. பாஜக வேகமாக வளர வேண்டும் என நாங்கள் சில முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றோம் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment