தமிழகத்தில் அடுத்த பொது முடக்கத்துக்கு வாய்ப்பு உள்ளது – அமைச்சர் பாண்டியராஜன்

தமிழகத்தில் அடுத்த பொது முடக்கத்துக்கு வாய்ப்பு உள்ளது என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் 4-ஆம் கட்டமாக, மே-31 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஊரடங்கில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அமைச்சர் பாண்டியராஜன் அவர்கள் இதுகுறித்து பேசுகையில், ‘தற்போதுள்ள சூழ்நிலை நீடித்தால், மேலும் சில தளர்வுக்காலுடன் அடுத்த பொதுமுடக்கத்திற்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.