அமைச்சர் செந்தில் பாலாஜி சம்பந்தபட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை.!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. 

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. கரூரில் உள்ள அவரது வீடு, சென்னையில் அவர் தங்கியுள்ள அரசு பங்களா உள்ளிட்ட இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.

மேலும், கோவையில் செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட இடங்களிலும் இந்த சோதனை காலை 7 மணி முதல் நடைபெற்று வருவதாக தெரிகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.