டெல்லியில் 18 வயதுக்கு மேல் 1.5 கோடி மக்கள் உள்ளனர்…! எங்களுக்கு 3 கோடி கொரோனா தடுப்பூசிகள் தேவை…! – டெல்லி முதல்வர்

அடுத்த மூன்று மாதங்களில் டெல்லி மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட கூடிய வகையில் மாதத்திற்கு 85 லட்சம் வழங்க வேண்டும்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி தேவையான தடுப்பூசி அளவை கிடைக்கப் பெற்றால் 2.6 கோடி தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றால் மூன்று மாதங்களுக்குள் டெல்லி அரசால் தடுப்பூசி போட முடியும் என தெரிவித்துள்ளார். டெல்லியில் 18 வயதிற்கும் மேல் சுமார் 1.5 கோடி மக்கள் உள்ளனர். அந்த கணக்கீட்டின்படி, இந்த 1.5 கோடி மக்களுக்கும் தடுப்பூசி போட டெல்லிக்கு இன்னும்  3 கோடிகொரோனா தடுப்பூசிகள் தேவை.

ஏற்கனவே 40 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் டெல்லி மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட கூடிய வகையில் மாதத்திற்கு 85 லட்சம் வழங்க வேண்டும் என்றும், தடுப்பூசி மட்டுமே இந்தியாவை கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையை தடுக்கக்கூடிய ஆயுதம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் காணொலி காட்சி மூலம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், டெல்லியில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கிய நாளிலிருந்து இளைஞர்கள் உற்சாகமாகத் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். தற்போது டெல்லியில் உள்ள 100 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் மையங்கள் 250 முதல் 300 ஆக உயர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், டெல்லியில் ஒரு நாளைக்கு,ஒரு லட்சம் தடுப்பூசி  வழங்கப்பட்டு வருகின்றன. தடுப்பூசி பெற பரிதாபாத், குர்கான், நொய்டாவில் இருந்து பலர் இங்கு வருகிறார்கள். டெல்லியில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து பாராட்டி செல்கின்றனர்.

எங்களுக்கு 40 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கிடைத்துள்ளது. இன்னும் எங்களுக்கு 2.60 லட்சம் தடுப்பூசிகள் தேவைப்படுகிறது. டெல்லியில் போதிய தடுப்பூசிகள் கிடைக்கவில்லை. தேவையான அளவு தடுப்பூசிகள் கிடைத்தால், டெல்லி அரசு மூன்று மாதங்களுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட முடியும் என்று தெரிவித்துள்ளார்.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

1 hour ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

4 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

4 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

5 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

5 hours ago

இறுதி கட்டத்தை எட்டும் வாக்குப்பதிவு… தற்போதைய நிலவரம் என்ன?

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…

5 hours ago