இரண்டு வாக்குச்சாவடிகளுக்காக 20 எந்திரங்கள்! ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் விமர்சனம்!

தேனி, தர்மபுரி, திருவள்ளூர், கடலூர் போன்ற மக்காவை தொகுதியில் மொத்தம் 13 வாக்குச்சாவடிகளில் மட்டும் சில தவறுகளின் காரணமாக மறுவாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதற்காக வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த பகுதி வாக்குச்சாவடிகளுக்கு கொண்டுசெல்லப்படுகின்றன.

இதன்படி தேனியில் இரண்டு வாக்குச்சாவடிகளில் மட்டும் நடைபெறும் மறுவாக்கு பதிவிற்காக 20 வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

இதற்கு எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் அமமுக கட்சியை சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன், கூறுகையில் ‘வாக்குப்பதிவு எந்திரங்கள் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்க வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்வது தொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் சார்பில் புகார் அளிக்கப்படும்’ என தெரிவித்தார்.

அதேபோல காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில் ‘எத்தனை வாக்கு இயந்திரங்களை மாற்றினாலும் ஓபிஎஸ் மகன் தோல்வியடைவது உறுதி. வாக்கு இயந்திரங்கள் எதற்காக மாற்றப்படுகிறது என்று கேட்டால் அதற்கு விடை இல்லை’ இவ்வாறு கூறினார்.

இவர்கள் இருவரும் அந்தந்த கட்சியின் சார்பாக தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆவார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment