தமிழகத்தில் இப்போதைக்கு திரையரங்குகள் திறக்கப்படாது- அமைச்சர் கடம்பூர் ராஜு!

தமிழகத்தில் இப்போதைக்கு திரையரங்குகள் திறக்கப்படாது என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

கொரானா வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாகவே திரையரங்குகள், பள்ளிகள், கல்லூரிகள், போக்குவரத்துத் துறைகள் என அனைத்தும் முடக்கப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் தற்போது பள்ளி கல்லூரிகளுக்கு சில தளர்வுகளையும், போக்குவரத்துக்கு முழுமையான தளர்வுகளையும் அரசு அறிவித்துள்ள நிலையில், திரையரங்குகளுக்கும் அரசு தளர்வுகள் கொடுக்கும் என திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் கூறியபோது, தமிழகத்தில் திரையரங்குகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை எனவும், எப்போது திறக்கப்படும் என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் விரைவில் அறிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய மாநில அரசின் கட்டுப்பாட்டில் ஓடிடி படம் வெளியிடுவது இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
author avatar
Rebekal