காதலியையும், காதலியின் தாயையும் தீயிட்டு கொளுத்தி தானும் தற்கொலை செய்துகொண்ட இளைஞன்!

தனக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் தனது காதலி மற்றும் காதலியின் தாயை தீயிட்டுக் கொளுத்தி தானும் தற்கொலை செய்து கொண்ட காதலன்.

சென்னை கொருக்குப்பேட்டை அனந்தநாயகி 2-வது தெருவில் வசித்து வரக்கூடிய வெங்கடம்மாள் என்பவரின் மகள் தான் ரஜிதா. வெங்கட்டம்மாளின் கணவர் வெங்கடேஷ் மாநகராட்சியில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பதாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இவரது மகள் ரஜிதா கணவரின் வேலையை தொடர்ந்து செய்யும் படி வெங்கட்டம்மாள் வாங்கி கொடுத்துள்ளார். இருப்பினும் அவரது மகள் ரஜிதா வீட்டுக்கு அடங்காமல் ஏழு வருடங்களாக பூபாலன் என்னும் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அவரது தாய் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து கடந்த மாதம் நிச்சயதார்த்தம் செய்து வைத்துள்ளார்.

இந்நிலையில் மிகுந்த மனவருத்தத்தில் காணப்பட்ட ரஜிதாவின் காதலன் பூபாலன் நேற்று அதிகாலை 4 மணியளவில் ரஜிதாவின் வீட்டிற்கு மனைவியுடன் சென்று ரஜிதா மற்றும் அவரது தாய் வெங்கட்டம்மாள் இருவர் மீதும் தீ வைத்து கொளுத்தி விட்டதாக கூறப்படுகிறது. மேலும் 33 பக்கங்கள் அடங்கிய நோட்டில் தான் தீயிட்டுக் கொளுத்தியது மற்றும் தனது தற்கொலைக்கான காரணத்தை கூறி விட்டு அவர்களுடன் சேர்ந்து தானும் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். தீயில் கருகி மூன்று பேர் அப்பகுதியில் உயிரிழந்த நிலையில் கொருக்குப்பேட்டை காவல்துறையினருக்கு இந்த சம்பவம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Rebekal

Recent Posts

முகத்தில் பளபளப்பு கூட வீட்டிலேயே கிரீம் தயார் செய்யலாம்… செய்முறை இதோ….

Life Style : முகப்பொலிவு பெற வீட்டிலே கிரீம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். பொதுவாக பலருக்கும் தங்கள் முகம் பொலிவாக இருக்க…

2 mins ago

சும்மா கிளப்பாதீங்க…திரும்ப வருகிறேன்! இசையமைப்பாளர் யுவன் விளக்கம்!

Yuvan Shankar Raja: தன்னுடைய இன்ஸ்டா கணக்கு DEACTIVATE ஆன நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர்…

37 mins ago

அவரால் மட்டும் தான் அது முடியும்! ரிஷப் பண்ட் குறித்து ரோஹித் சர்மா!

Rohit Sharma : இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா ரிஷப் பண்ட்டை பற்றி பாராட்டி பேசியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தற்போது…

51 mins ago

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு… சுனாமி எச்சரிக்கை..!

Indonesia: இந்தோனேசியாவில் 3 நாட்களில் 5 முறை எரிமலை வெடித்ததால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் உள்ள ருவாங் என்ற எரிமலை கடந்த 3…

52 mins ago

மதுரை சித்திரை திருவிழா உருவான வரலாறு தெரியுமா?

மதுரை சித்திரை திருவிழா  -உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா உருவான வரலாற்றை இப்பதிவில் அறியலாம். மீனாட்சி அம்மன் வரலாறு : மீனாட்சி அம்மன்…

56 mins ago

சூர்யாவும் இல்ல..பட்லரும் இல்ல..ரோஹித் தான்.! வில்லியம்சன் அதிரடி கருத்து.!

ஐபிஎல் 2024 : சூர்யாவும் இல்ல..பட்லரும் இல்ல, ரோஹித் ஷர்மா தான் டி20 இரட்டை அடிப்பார் என கேன் வில்லியம்சன் கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்கள்…

1 hour ago